Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 022/116 திருவிண

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 022/116 திருவிண

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 022/116 திருவிண்ணகராளா ! பெருவிண்ணகர் எண்ணேன் !

    திருப்பதி - 16/108. சோழ நாடு - 16/40 : திருவிண்ணகர்


    கையும் உரையும் கருத்தும் உனக்கே அடிமை
    செய்யும்படி நீ திருத்தினாய் - ஐயா !
    திருவிண்ணகராளா - சிந்தையிலும் எண்ணேன் ,
    பெருவிண்ணகர் ஆறும் பேறு


    பதவுரை :


    ஐயா திருவிண்ணகராளா தலைவனே ! திருவிண்ணகரை ஆள்பவனே !
    கையும் உரையும் கருத்தும்எனது கைகளும் , வாக்கும் , எண்ணமும்
    உனக்கே அடிமை செய்யும்படிஉனக்கே அடிமை செய்யும்படி
    நீ திருத்தினாய் என்னை நல் வழியில் போகச் செய்தாய் !
    பெருவிண்ணகர் ஆறும் பேறு பெருமை உள்ள இந்திர லோகத்தை ஆளும் சுகத்தை
    சிந்தையிலும் எண்ணேன் மனதாலும் இனி நான் நினைக்க மாட்டேன் !








    V.Sridhar
Working...
X