Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 025/116 தென் நாக&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 025/116 தென் நாக&#

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 025/116 தென் நாகையாய் ! அருளிச் செய் !

    திருப்பதி - 19/108. சோழ நாடு - 19/40 : திரு நாகை

    சேர்ந்து உனக்குக் குற்றேவல் செய்திலன் ; என் சிந்தையில் நீ
    ஆர்ந்ததற்கு ஓர் கைம்மாறு அறிகிலேன் - பூந்துவரை
    மன்னா ! கை ஆழி வலவா ! வலம்புரியாய் !
    தென் நாகையாய் ! அருளிச் செய்

    பதவுரை :

    பூந்துவரை மன்னா அழகிய துவாரகைக்கு அரசனே !
    கை ஆழி வலவா வலக்கையில் சுதர்சன சக்கரத்தை உடையவனே !
    வலம்புரியாய் ! இடக்கையில் பாஞ்ச ஜன்யம் எனும் வலம்புரி சங்கை உடையவனே !
    தென் நாகையாய் ! அழகிய நாகையில் இருப்பவனே !
    சேர்ந்து உனக்கு அடியேன் உன்னை சரண் அடைந்து
    குற்றேவல் செய்திலன் உனக்கு சிறிய கைங்கர்யத்தையும் செய்யவில்லை
    என் சிந்தையில் அடியேன் மனத்தில்
    நீ ஆர்ந்ததற்கு நீ நன்கு எழுந்தருளி இருப்பதற்கு
    ஓர் கைம்மாறு அறிகிலேன் ஒரு பிரதி உதவியும் அறிய வில்லை !
    அருளிச் செய் கூறி அருள்வாயாக !




    --
    V.Sridhar
    Last edited by sridharv1946; 29-10-13, 20:06.
Working...
X