Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 031/116 கூடலூரா&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 031/116 கூடலூரா&#

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 031/116 கூடலூராய் உன் தொண்டனேன் !



    திருப்பதி - 25/108. சோழ நாடு - 25/40 : திருக் கூடலூர்


    உண்டு, கேட்டு , உற்று , மோந்துப் பார்க்கும் ஐவர்க்கே
    தொண்டு படலாமோ உன் தொண்டனேன் ? - விண்டு இலங்கும்
    ஆடல் ஊர் நேமி முதல் ஐம்படையாய் !அன்பு உடையாய் !
    கூடலூராய் -இதனைக் கூறு


    பதவுரை :


    விண்டு இலங்கும் விட்டு விட்டு ஒளி வீசும்
    ஆடல் ஊர் வெற்றி பொருந்திய
    நேமி முதல் ஐம்படையாய் ! சக்கரம் முதலிய ஐந்து ஆயுதங்களை உடையவனே !
    அன்பு உடையாய் ! கருணை உள்ளவனே !
    கூடலூராய் திருக் கூடலூரில் இருப்பவனே !
    உன் தொண்டனேன் உனக்கே அடியவனான நான்
    உண்டு, இனிய உணவுகளைச் சுவைத்தும் ,
    கேட்டு , இனிய இசை முதலியவற்றைக் கேட்டும் ,
    உற்று , இனிய பொருட்களைத் தொட்டும் ,
    மோந்து நறு மணமுள்ள பொருட்களை முகர்ந்தும் ,
    பார்க்கும் ஐவர்க்கே நற்காட்சிகளைப் பார்த்தும் மகிழ்கின்ற ஐம்புலன்களுக்கே
    தொண்டு படலாமோ அடிமைப் படலாமோ ?
    இதனைக் கூறு பதில் சொல்வாய் !








    --
    V.Sridhar
Working...
X