Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 032/116 கண்ணங்க&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 032/116 கண்ணங்க&#

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 032/116 கண்ணங்குடியான் கருத்து தேறுகிலேன் !



    திருப்பதி - 26/108. சோழ நாடு - 26/40 : திருக் கண்ணன் குடி


    கூறு புகழ்த் தன அடிக்கே கூட்டுவனோ இன்னம் எனை
    வேறுபடு பல் பிறப்பில் வாழ்த்துவனோ - தேறுகிலேன்
    எண்ணம் குடியாய் இருந்தான் , நின்றான் , கிடந்தான் ,
    கண்ணங்குடியான் கருத்து


    பதவுரை :


    எண்ணம் குடியாய் என் மனத்தில் குடி இருந்து கொண்டு அங்கே
    இருந்தான் , நின்றான் வீற்றிருப்பதையும் , நிற்பதையும்
    கிடந்தான் சயனிப்பதையும் செய்பவனும்

    கண்ணங்குடியான திருக் கண்ணன்ங்குடியில் இருப்பவனுமான எம்பெருமான்
    கூறு புகழ்த் தன அடிக்கே வேதங்களால் புகழப்படும் தன திருவடிகளில்
    கூட்டுவனோ என்னைச் சேர்த்துக் கொள்வானோ ?
    இன்னம் எனை அல்லது மீண்டும் என்னை
    வேறுபடு பல் பிறப்பில் பல் வேறு பிறப்புகளில் தள்ளி
    வீழ்த்துவனோ வருத்துவானோ ?
    கருத்து தேறுகிலேன் எம்பெருமான் திரு உள்ளம் அறியேன்



    --
    V.Sridhar
Working...
X