Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 036/116 நெஞ்சே ! ம

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 036/116 நெஞ்சே ! ம

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 036/116 நெஞ்சே ! மணி மாடக் கோயில் வணங்கு

    திருப்பதி - 30/108. சோழ நாடு - 30/40 : திரு மணி மாடக் கோயில்

    சீரே தரும் காதில் சேருகைக்கு நான் உன்னை
    நேரே வணங்கினேன் , நெஞ்சே ! நீ பாரில்
    அணி மாடக் கோயில் அரங்கனார் நாங்கூர்
    மணி மாடக் கோயில் வணங்கு

    பதவுரை :

    நெஞ்சே என் மனமே !
    சீரே தரும் கதியில் சேருகைக்கு சிறப்பையே தரும் நல்ல கதியான முக்திக்கு செல்ல
    நான் உன்னை நேரே வணங்கினேன் நான் உன்னை நன்கு தொழுகின்றேன்
    பாரில் அணி மாடக் உலகில் மாட மாளிகைகள் கொண்ட
    கோயில் அரங்கனார் கோயில் எனப்படும் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் திரு அரங்க நாதனது
    நாங்கூர திரு நாங்கூரைச் சேர்ந்த
    மணி மாடக் கோயில் நீ வணங்கு திரு மணி மாடக் கோயிலை நீ வணங்கு



    --
    V.Sridhar
    Last edited by sridharv1946; 03-11-13, 21:15.
Working...
X