Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 042/116 என் நெஞ்&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 042/116 என் நெஞ்&

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 042/116 என் நெஞ்சே !திருத் தெற்றியம்பலத்தைச் சேர் !

    திருப்பதி - 36/108. சோழ நாடு - 36/40 : திருத்தெற்றியம்பலம்

    சென்றது காலம் , திரை , நரை , மூப்பு ஆன ; இனி
    என்று கொல் சாவு ? அறியேன் ; என் நெஞ்சே - கன்றால்
    உருத்து எற்றி அம்பலத்தை ஓர் விளவின் வீழ்த்தான்
    திருத் தெற்றியம்பலத்தைச் சேர்

    பதவுரை :

    என் நெஞ்சே எனது மனமே !
    சென்றது காலம் வாழ்நாள் பெரும் பகுதி கழிந்தது
    திரை , நரை , மூப்பு ஆன தோல் சுருக்கமும் , முடி வெளுத்தலும் . கிழத்தனமும் வந்து விட்டது
    இனி என்று கொல் சாவு ? அறியேன் இனி மரணம் என்றைக்கோ ? அறிய மாட்டேன்
    ஓர் விளவின் அம் பலத்தை ஒரு விளாமரத்தின் அழகிய பழத்தை (அசுரனை)
    கன்றால் உருத்து எற்றி கன்றை (அசுரனை) வீசி எறிந்து
    வீ ழ்த்தான்விழச்செய்த திருமாலின்
    திருத் தெற்றியம்பலத்தைச் சேர்திருத் தெற்றியம்பலத்தை அடைவாயாக


    V.Sridhar
Working...
X