Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 043/116 திரு மணி&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 043/116 திரு மணி&

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 043/116 திரு மணிக்கூடத்தானைச் செப்பு !

    திருப்பதி - 37/108. சோழ நாடு - 37/40 : திரு மணிக் கூடம்

    சேராது முன் செய்த தீவினை ; பின் செய்ததுவும்
    வாராது இனி ; நீ - மட நெஞ்சே ! - நேராக்-
    குரு மணிக் கூடத்து ஆனைக் கொம்பு பறித்தானை ,
    திரு மணிக்கூடத்தானைச் செப்பு

    பதவுரை :

    மட நெஞ்சே அறியாமை உடைய என் மனமே !
    நேரா குரு மணிக் கூடத்து எதிர்த்து , இரத்தினங்கள் இழைக்கப்பட்ட
    ஆனைக் கொம்புகுவலயாபீடம் எனும் யானையின் தந்தங்களை
    பறித்தானை பிடுங்கி யானையை அழித்தவனும் ,
    திரு மணிக்கூடத்தானை நீ செப்பு திரு மணிக் கூடத்தில் இருக்கும் திருமாலை வணங்கு
    முன் செய்த தீவினை சேராது பழைய பாவமும் அணுகாது
    பின் செய்ததுவும் இனி வாராதுஇனி அறியாமல் செய்யும் பாவமும் உன்னை அணுகாது
    --

    V.Sridhar

Working...
X