Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 045/116 வெள்ளக்&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 045/116 வெள்ளக்&#

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 045/116 வெள்ளக்குளத்தே விடாய் இருவரும் தணிந்தோம் !

    திருப்பதி - 39/108. சோழ நாடு - 39/40 : திரு வெள்ளக்குளம்

    நான் அடிமை செய்ய , விடாய் நான் ஆனேன் ; எம்பெருமான்
    தான் அடிமை கொள்ள விடாய் தான் ஆனான் ; ஆனதற்பின் ,
    வெள்ளக்குளத்தே விடாய் இருவரும் தணிந்தோம் ,
    உள்ளம் குளம் , தேனை ஒத்து

    பதவுரை :

    நான் அடிமை செய்ய எம்பெருமானுக்குத் தொண்டு செய்ய
    நான் விடாய் ஆனேன் நான் பேராவல் கொண்டேன் .
    எம்பெருமான் தான் அடிமை கொள்ள எம்பெருமானும் , என்னை அடிமையாக ஏற்க
    தான் விடாய் ஆனான் தானும் பேராவல் கொண்டான் .
    னதற்பின் வெள்ளக்குளத்தே அதன்பின் , வெள்ளக்குளத்தில்
    உள்ளம் குளம் , தேனை ஒத்து மனதில் வெல்லப் பாகையும் , தேனையும் போன்று சேர்ந்து
    விடாய் இருவரும் தணிந்தோம் இருவரும் ஆவல் தணியப் பெற்றோம்








    --
    V.Sridhar
    Last edited by sridharv1946; 06-11-13, 13:48.
Working...
X