Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 046/116 பார்ததன

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 046/116 பார்ததன

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 046/116 பார்தன் பள்ளிக்குள் பணி

    திருப்பதி - 40/108. சோழ நாடு - 40/40 : திருப் பார்த்தன் பள்ளி

    ஒத்து அமரர் ஏத்தும் ஒளிவிசும்பும் , பாற்கடலும் ,
    இத்தலத்தில் காண்பு அரிய என் நெஞ்சே ! - சித்து உணர்ந்த
    தீர்த்தன் பள்ளிக்கு இருந்து செப்ப வெளி நின்றானைப் -
    பார்ததன் பள்ளிக்குள் பணி

    பதவுரை :


    என் நெஞ்சே எனது மனமே !
    ஒத்து அமரர் ஏத்தும் ஒன்றாய் தேவர்களும் நித்ய சூரிகளும் தொழும்
    ஒளிவிசும்பும் , பாற்கடலும் , பிரகாசமான வைகுண்டமும் , பாற்கடலும்
    இத்தலத்தில் காண்பு அரிய இந்த பூமியில் காண முடியாது
    சித்து உணர்ந்த தீர்த்தன் ஜீவாத்மாவை அறிந்த பிரஹ்லாதன்
    பள்ளிக்கு இருந்து செப்ப பள்ளியில்ருந்து "எங்கும் உளன்" என்று சொல்ல
    வெளி நின்றானைப் தூணிலிருந்து வெளியே வந்த நரசிம்ஹனை
    பார்த்தான் பள்ளிக்குள் பணி பார்ததன்பள்ளியில் சென்று வணங்கு





    சோழ நாட்டுத் திருப்பதிகள் முற்றிற்று

    --
Working...
X