Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 050/116 திருத்த&a

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 050/116 திருத்த&a

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 050/116 திருத்தண் காலூரான் துழாயின் தண் கால் ஊராதோ ?

    திருப்பதி - 44/108. பாண்டிய நாடு - 04/18 : திருத் தண் காலூர்

    மாறு பட வாடை எனும் வன் கால் வன முலை மேல்
    ஊறு பட ஊர்ந்த உளைவு எல்லாம் - மாற
    திருத்தண் காலூரான் திருத்தண் துழாயின்
    மறுத்தண் கால் ஊராதோ , வாய்ந்து

    பதவுரை :

    வாடை எனும் வன் கால் வாடை என்கிற வலிய காற்று
    மாறு பட விரோதமாக வந்து
    வன முலை மேல் எனது தனங்களின் மேல்
    ஊறு பட ஊர்ந்த தாபம் உண்டாகுமடி தவழ்ந்ததால் ஏற்பட்ட
    உளைவு எல்லாம் மாற வருத்தம் முழுவதும் நீங்கும்படி
    திருத்தண் காலூரான் திருத்தண்காலில் இருக்கும் எம்பிரான் அணிந்த
    திருத்தண் துழாயின் அழகிய குளிர்ந்த திருத் துழாயின் மணமுள்ள
    மறுத்தண் கால் ஊராதோ , வாய்ந்து குளிர்ந்த காற்று பொருந்தி என் மீது தவழாதோ ?





    --
    V.Sridhar
Working...
X