Announcement

Collapse
No announcement yet.

ஜாதிகள் இல்லாத சமயம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஜாதிகள் இல்லாத சமயம்

    ஜாதிகள் இல்லாத சமயம்


    சீக்கிய சமயத்தில், ஜாதிகள் எதுவும் இல்லை. "அனைவரும் ஒரே இனம்' என்னும் கருத்து உள்ளது.துவக்க காலத்தில் குருநானக் சீக்கிய சமயத்தை உருவாக்கிய போது, எந்த ஜாதியில் இருந்து சீக்கிய சமயத்திற்குள் வந்தார்களோ, அந்த ஜாதியின் அடையாளத்துடன் சீக்கிய சமயத்தில் இருந்தனர். 10வது குருவான குரு கோவிந்த் சிங், ஜாதி வேறுபாடுகளைக் களைய வேண்டும் என்னும் நோக்கில், சீக்கிய ஆண்கள் அனைவரும் தங்கள் ஜாதியின் குடும்பப் பெயரை கைவிட்டு, தங்கள் பெயருக்குப் பின்னால் "சிங்' என்பதை மட்டும் சேர்க்க வேண்டும் என்னும் நடைமுறையை உருவாக்கினார்.

    "சிங்கம்' என்னும் பொருளில் தான் "சிங்' என்ற பெயர் சேர்க்கப்பட்டது. தனது பெயரை முதலில் கோவிந்த் ராய் என்பதில் இருந்து, கோவிந்த் சிங் என மாற்றினார். பெண்களின் பெயருக்கு பின்னால் இளவரசி என்னும் அர்த்தத்தில் "கவுர்' என்னும் பெயர் சேர்க்கப்பட்டது. இவ்வாறு சீக்கிய சமயம், ஜாதிகள் இல்லாத சமயமாக உருவானது.


    Source: Dinamani
Working...
X