Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 078/116 அயிந்தி&a

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 078/116 அயிந்தி&a

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 078/116 அயிந்திர புரத்தார்க்கு தொண்டர் எம் தெய்வம் !

    திருப்பதி - 72/108. நடு - 1/2 : திரு அயிந்திர புரம்

    அன்பு அணிந்த சிந்தையராய் , ஆய்ந்த மலர் தூவி
    முன் பணிந்து , "நீர் எமக்கு மூர்த்தியரே" - என்பர்
    எம் அயிந்திர புரத்தார்க்கு இன் தொண்டர் ஆனார் -
    தமை இந்திரபுரத்தார் தாம்

    பதவுரை :

    எம் அயிந்திர புரத்தார்க்கு எனது திரு அயிந்திரபுரத்தில் இருக்கும் தெய்வ நாயகனுக்கு
    இன் தொண்டர் ஆனார் தமை நல்ல அடியார்கள் ஆனவர்களை
    இந்திரபுரத்தார் தாம் தேவேந்திரனது அமராவதி நகரில் இருக்கும் தேவர்கள்
    அன்பு அணிந்த சிந்தையராய் பக்தி கொண்ட மனம் உடையவர்களாய்
    ஆய்ந்த மலர் தூவி அந்த பக்தர்கள் மீது சிறந்த மலர்களைத் தூவி
    முன் பணிந்து அவர்களுக்கு முன்னே வந்து தொழுது
    "நீர் எமக்கு மூர்த்தியரே" என்பர் "நீங்களே எங்களுக்கு தெய்வம்" என்று கூறுவர்




    --
    V.Sridhar
Working...
X