Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 089/116 பூங்கார&am

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 089/116 பூங்கார&am

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 089/116 பூங்காரகம் காணப் போதுவார் தாள் தாங்கு !

    திருப்பதி - 83/108. தொண்டை - 10/22 : திருக் காரகம்

    ஓராதார் , "கல்வி உடையேம் , குலம் உடையேம் ,
    ஆராதனம் உடையேம் , யாம் " என்று சீர் ஆயன்
    பூங்காரகங் காணப் போதுவார் தாள் தலை மேல்
    தாங்கார் அகங்காரத்தால்

    பதவுரை :

    ஓராதார் அறிவற்றவர்கள்
    யாம் கல்வி உடையேம் " நாம் நிரம்பக் கல்வி கற்றிருக்கிறோம் ,
    குலம் உடையேம் உயர்ந்த குடியில் பிறந்து இருக்கிறோம் ,
    ஆராதனம் உடையேம் தினமும் திரு ஆராதனம் செய்கிறோம் "
    என்று அகங்காரத்தால் என்று கருதிச் செருக்கினால்
    சீர் ஆயன் சிறப்புள்ள ஆயர் குலத்தில் உதித்த திருமால் இருக்கும்
    பூங்காரகம் காண திருக் காரகத்தை தரிசனம் செய்ய
    போதுவார் தாள் யாத்திரை செல்லும் அடியார்களுடைய திருவடிகளை
    தலை மேல் தாங்கார் தலை மேல் சூட மாட்டார்கள்

    V.Sridhar
Working...
X