Announcement

Collapse
No announcement yet.

சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்த&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்த&#

    சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி

    ஒவ்வொரு மாதமும் வரும் 'சங்கடஹர சதுர்த்தி' நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடையின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். 'ஹர'' என்ற சொல்லுக்கு அழுத்தல் என்று பொருள்.



    Click image for larger version

Name:	ganapathy.jpg
Views:	1
Size:	17.6 KB
ID:	35449

    விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும் விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக் கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சவுபாக்கியங்களையும் பெறலாம்.

    விரதம் இருப்பது எப்படி?


    சங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும். மாலை ஆலயத்திற்கு சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக்கொள்ள வேண்டும்.

    அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபாவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும். விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்ற வேண்டும். சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகருக்குரிய,

    'ஓம் தத் புருஷாய வித் மஹே வக்ர
    துண்டாய தீமஹி தன்னோ
    தந்தி ப்ரசோ தயாத்''


    எனும் கணேச காயத்ரீ மந்திரத்தையும், தமிழில் விநாயகர் அகவலையும் பாடி தொந்திக் கணபதியை தியானித்தால் கூடுதல் பலன் உண்டு.

    source:http://www.maalaimalar.com/2013/03/01112930/sankara-hara-chaturthi-vratham.html
Working...
X