Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 101/116 கடிகை மா&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 101/116 கடிகை மா&#

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 101/116 திருக்கடிகை மாயவனை ஒரு கடிகை நினை !

    திருப்பதி - 95/108. தொண்டை - 22/22 : திருக் கடிகை (சோளிங்க புரம் )

    சீர் அருளால் நம்மைத் திருத்தி , நாம் முன் அறியாக்-
    கூர் அறிவும் தந்து , அடிமை கொண்டதற்கே - நேரே
    ஒரு கடிகையும் மனமே ! உள்ளுகிலாய் முத்தி
    தரு கடிகை மாயவனைத் தான்

    பதவுரை :

    மனமே என் மனமே !
    சீர் அருளால் நம்மைத் திருத்தி சிறந்த திரு அருளால் நம்மை நல வழிப் படுத்தி ,
    நாம் முன் அறியா நாம் இதற்கு முன்னே அறிந்திராத
    கூர் அறிவும் தந்து நுட்பமான அறிவையும் நமக்குக் கொடுத்து ,
    அடிமை கொண்டதற்கே நம்மை ஆட்கொண்டதற்காக
    முத்தி தரு தன்னை அடைந்தார்க்கு நற்கதியைத் தரும்
    கடிகை மாயவனைத் தான் திருக் கடிகையில் இருக்கும் நரசிம்ஹனை
    ஒரு கடிகையும் உள்ளுகிலாய் ஒரு நாழிகையாவது நினைக்க மாட்டாயா ?

    ***************************************************************
    தொண்டை நாட்டுத் திருப்பதிகள் முற்றிற்று
    ***************************************************************
    V.Sridhar
    Last edited by sridharv1946; 22-11-13, 21:59.
Working...
X