Announcement

Collapse
No announcement yet.

நெல்லிக்காயும் அதன் மருத்துவ குணங்களும&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நெல்லிக்காயும் அதன் மருத்துவ குணங்களும&#

    தமிழில் நெல்லி என்றும் அம்ம்லா என்று ஹிந்தியிலும், ஆங்கிலத்தில் Indian gooseberry என்றும் அழைக்கப்படும் இந்தக்கநியைப்பற்றி நாம் அறிவோமா?. அவ்வையார் அதியமானுக்கு கொடுத்ததை நாம் அறிவோம் ஏன் என்று இப்போது பார்ப்போம்.தினம் ஒரு நெல்லிக்கனி உண்போம்.
    இப்போது சீசன்.
    வரதராஜன்





    நெல்லிக் கனியின் மருத்துவ குணங்கள் - Health Benefits of Amla



    நெல்லிக் கனியின் மருத்துவ குணங்கள்
    நெல்லி, உடலுக்கு இளமை தரும் ஓர் ஒப்பற்ற கனி. நெல்லியை வலிமை நெல்லி, உணவு நெல்லி, அமிர்த நெல்லி என்று கூறுகின்றனர். நெல்லியில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. தாது விருத்தி மற்றும் தலை முடி டானிக்காக இக்கனி பயன்படுத்தப்படுகிறது. காயகல்பம் இக்கனியில் இருந்து தான் உருவாக்கப்படுகிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகளவில் உள்ளது. நெல்லியை காய வைத்து அதன் மூலம் சாறு எடுத்தும் ஆரோக்கியம் பெறலாம்.

    100 கிராம் நெல்லிச்சாறில், நீர், கொழுப்பு, புரதம், மாவுப் பொருள், நார்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் ஆகியவை போதிய அளவு அடங்கியுள்ளன. பல் நோய், அஜீரணம், மூட்டுவலி மற்றும் பார்வை குறைபாட்டிற்கு ஏற்ற அருமருந்தாகும். நீண்ட ஆயிளுக்கு, நாளும் நெல்லிச்சாறு அருந்தினால், இதைப்போல் அருமருந்து வேறில்லை. பசியின்மையை விலக்கி, பசியை உணரவைக்கும். மலச்சிக்கல், மாதவிடாய் மற்றும், மூல நோய் ஆகியவை சரியாகும். நெல்லியை உண்டு வந்தால், பெண்களின் கர்ப்பப்பை கோளாறு, நீரிழிவு, ரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி விலகும். நெல்லியை காய வைத்தாலும், அதிலுள்ள வைட்டமின் ‘சி’ சத்து குறைந்து போகாது. நிழலில் காய வைக்கும்போது இந்த சக்தி அதிகரிக்கிறது. முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பது மருத்துவ கூற்று. நவீன ஆராய்ச்சி மூலமும் இதை உணர வைத்திருக்கின்றனர். ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்றி, நோய் நொடிகளிலிருந்து உடலைப் பாதுகாத்து. முதுமையை விரட்டி, உடலை நல்ல நிலையில், என்றும் இளமையுடன் இருக்க செய்கிறது. இது நெல்லிக்கனியில் மிகுந்த அளவு காணப்படுகிறது.

    பித்தத்தை குறைத்து, உடலிலும், ரத்தத்திலும் தேங்கியுள்ள கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும் தன்மை இக்கனிக்கு உண்டு. ஆப்பிளை விட3 மடங்கு புரதச் சத்தும், ஆரஞ்சை விட 15 மடங்கு வைட்டமின் ‘சி’ சத்தும் நிறைந்துள்ளது. இருதய வாழ்வுகள், ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, சீராக செயல்பட வைக்கிறது. கார்போஹைட்ரேட், நார் சத்து, இரும்பு சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ‘பி’ காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.
    நெல்லி இலையை 25 கிராம் எடுத்து நீரில் இட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து, வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும். 15 கிராம் நெல்லிக்காயை இடித்து அரை லிட்டர் நீர் விட்டு 100 மி.லி., ஆக காய்ச்சி 20மி.லி., தேன் கலந்து 40 மி.லி., ஆக 3 வேளைஎன, நன்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும். நெல்லி இலைகளை நீரில் ஊற வைத்து கஷாயம் செய்து கண்களை கழுவினால், கண் நோய்கள் தீரும்.

    நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சி பெரும். நெல்லிக்காய் சாற்றை தேனுடன் கலந்து கலை, மலை அருந்தி வந்தால் கண்புரை நோய், கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபாலா சூரணம் செய்து, காலை, மாலை வெந்நீரிலோ அல்லது தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி இளமையுடன் இருக்கலாம். நெல்லி வற்றல், பச்சை பயிறு வகைக்கு 20 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீர் விட்டு 200 மி.லி.,யாகக் காய்ச்சி வடித்து, 100 மி.லி., என காலையும், மாலையும் அருந்தி வந்தால், தலைச்சுற்றல், கிறுகிறுப்புடன் கூடிய ரத்தக் கொதிப்பு நீங்கும்.


    இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்னோர்கள். அதன் மூலம் சக்தியையும், உயிர் ஆற்றலையும் பெற்றனர். ஆரோக்கியமான உடலையும் நீண்ட ஆயுளையும் அனுபவத்தில் பெற்றவர்கள். நோய் வருமுன் தடுக்கவும், வந்தபின் நோயை போக்கவும் பயன்படும் பொருட்கள் இயற்கையிலேயே நம்மைச் சுற்றி நிறைய உள்ளன. நாம் மறந்துவிட்ட
    இயற்கை உணவை நினைவூட்டவே இந்த பதிவு.

    முதலில் மிகவும் எளிய கனி. பார்த்த உடன் நாவில் நீர் ஊறவைக்கும் கனி. இளமையை தரும் கனி. நீரழிவு நோய்க்கு மருந்தாகப் பயன்படும் கனி. ஒரு ஆப்பிள் பழத்திற்கு இணையான சத்துக்களைக் கொண்ட கனி. ஏழைகளின் ஆப்பிள் என செல்லமாக அழைக்கப்படும்


    நெல்லிக்கனியின் மருத்துவ பயன்களைப் பார்க்கலாம். வெவ்வேறு மொழிகளில் நெல்லிக்கனிக்கு வழங்கப்படும் பெயர்கள்.

    தமிழ் -நெல்லிக்காய்

    சமஸ்கிருதம் -அமலிகா

    ஹிந்தி -ஆம்லா

    குஜராத்தி -ஆம்லா

    மலையாளம் -நெல்லிக்கா

    கன்னடம் -நெல்லி

    விட்டமின் 'சி' சத்து அதிக அளவில் உள்ளது. உடலுக்கு எதிர்ப்பு சக்தியைத் தருவதற்கும், கண்களை இளமையாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதில் லெனின் என்னும் வேதிப்பொருள் உள்ளது. எனவே இதனை வெயிலில் காயவைத்தாலும் இதிலுள்ள விட்டமின் சத்து குறையாது. மாறாகக் கூடவே செய்யும். நம் உடலில் தினந்தோறும் நடைபெறும் வளர்சிதை மாற்றத்தில் அத்தியாவசியமான காரணிகளுடன் இணைந்து நோயைத்தரக் கூடிய ஆக்சிஜன் அயனிகள் ஃப்ரீரேடிக்கல்ஸ் எனப்படுகின்றன.இவை உடலில் தேங்கினால் மாரடைப்பைஉருவாக்கும் தன்மை உடையவை. மேலும் ரத்தக்குழாய்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்தும்ஆற்றல் படைத்தவை.முதுமைக்கும் சில நேரங்களில் புற்று நோய்க்கும் வழிவகுக்கிறது. இந்த ஃப்ரீ ரேடிகல்ஸை உடலில் இருந்து வெளியேற்றும் ஆற்றல் நெல்லிக்காய்க்கு உண்டு.

    நெல்லிக்காயின் மருத்துவ நலன்கள்:
    1.தலைமுடி கருத்து நீண்டு வளர உதவுகிறது.

    2.இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

    3.கல்லீரல் வேலை செய்ய உதவுகிறது.

    4.ஞாபக சக்தியை அதிகரிக்கப் பயன்படுகிறது.

    5.இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.

    6.நகம், பல் ஆகியவற்றை பலப்படுத்துகிறது.

    7.முகச்சுருக்கத்தைக் குறைத்து இளமைத்தோற்றத்தைத் தருகிறது.

    8.இன்சுலின் சுரப்பை அதிகரித்து இரத்தத்தில் குளுக்கோஸின் அளவைக்

    குறைக்கிறது. இதன் மூலம் நீரழிவைக் கட்டுப்படுத்த உதவுகி
    றது.


    நெல்லி, உடலுக்கு இளமை தரும் ஓர் ஒப்பற்ற கனி. நெல்லியை வலிமை நெல்லி, உணவு நெல்லி, அமிர்த நெல்லி என்று கூறுகின்றனர். நெல்லியில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. தாது விருத்தி மற்றும் தலை முடி டானிக்காக இக்கனி பயன்படுத்தப்படுகிறது. காயகல்பம் இக்கனியில் இருந்து தான் உருவாக்கப்படுகிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகளவில் உள்ளது. நெல்லியை காய வைத்து அதன் மூலம் சாறு எடுத்தும் ஆரோக்கியம் பெறலாம்.

    100 கிராம் நெல்லிச்சாறில், நீர், கொழுப்பு, புரதம், மாவுப் பொருள், நார்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் ஆகியவை போதிய அளவு அடங்கியுள்ளன. பல் நோய், அஜீரணம், மூட்டுவலி மற்றும் பார்வை குறைபாட்டிற்கு ஏற்ற அருமருந்தாகும். நீண்ட ஆயிளுக்கு, நாளும் நெல்லிச்சாறு அருந்தினால், இதைப்போல் அருமருந்து வேறில்லை. பசியின்மையை விலக்கி, பசியை உணரவைக்கும். மலச்சிக்கல், மாதவிடாய் மற்றும், மூல நோய் ஆகியவை சரியாகும். நெல்லியை உண்டு வந்தால், பெண்களின் கர்ப்பப்பை கோளாறு, நீரிழிவு, ரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி விலகும். நெல்லியை காய வைத்தாலும், அதிலுள்ள வைட்டமின் ‘சி’ சத்து குறைந்து போகாது. நிழலில் காய வைக்கும்போது இந்த சக்தி அதிகரிக்கிறது. முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பது மருத்துவ கூற்று. நவீன ஆராய்ச்சி மூலமும் இதை உணர வைத்திருக்கின்றனர். ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்றி, நோய் நொடிகளிலிருந்து உடலைப் பாதுகாத்து. முதுமையை விரட்டி, உடலை நல்ல நிலையில், என்றும் இளமையுடன் இருக்க செய்கிறது. இது நெல்லிக்கனியில் மிகுந்த அளவு காணப்படுகிறது.

    பித்தத்தை குறைத்து, உடலிலும், ரத்தத்திலும் தேங்கியுள்ள கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும் தன்மை இக்கனிக்கு உண்டு. ஆப்பிளை விட3 மடங்கு புரதச் சத்தும், ஆரஞ்சை விட 15 மடங்கு வைட்டமின் ‘சி’ சத்தும் நிறைந்துள்ளது. இருதய வாழ்வுகள், ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, சீராக செயல்பட வைக்கிறது. கார்போஹைட்ரேட், நார் சத்து, இரும்பு சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ‘பி’ காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.
    நெல்லி இலையை 25 கிராம் எடுத்து நீரில் இட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து, வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும். 15 கிராம் நெல்லிக்காயை இடித்து அரை லிட்டர் நீர் விட்டு 100 மி.லி., ஆக காய்ச்சி 20மி.லி., தேன் கலந்து 40 மி.லி., ஆக 3 வேளைஎன, நன்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும். நெல்லி இலைகளை நீரில் ஊற வைத்து கஷாயம் செய்து கண்களை கழுவினால், கண் நோய்கள் தீரும்.

    நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சி பெரும். நெல்லிக்காய் சாற்றை தேனுடன் கலந்து கலை, மலை அருந்தி வந்தால் கண்புரை நோய், கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபாலா சூரணம் செய்து, காலை, மாலை வெந்நீரிலோ அல்லது தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி இளமையுடன் இருக்கலாம். நெல்லி வற்றல், பச்சை பயிறு வகைக்கு 20 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீர் விட்டு 200 மி.லி.,யாகக் காய்ச்சி வடித்து, 100 மி.லி., என காலையும், மாலையும் அருந்தி வந்தால், தலைச்சுற்றல், கிறுகிறுப்புடன் கூடிய ரத்தக் கொதிப்பு நீங்கும்.





Working...
X