Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 110/116 வடமதுரை&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 110/116 வடமதுரை&#

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 110/116 வடமதுரையான் தஞ்சம் என்று வினை நீக்கு

    திருப்பதி - 104/108 வடநாடு - 09/12 :திரு வட மதுரை

    செல்வம் , உயிர் , உடம்பு , சேர உரித்தாக்கி
    வல்வினையை நீக்குமினோ , மாந்தர்காள் - தொல்லை
    வடமதுரையான் , கழலே வாய்த்த தஞ்சம் என்று
    திடமது உரை செய்தான் திறத்து

    பதவுரை :

    மாந்தர்காள் மனிதர்களே !
    கழலே வாய்த்த தஞ்சம் என்று எல்லோர்க்கும் தனது திருவடிகளே பாதுகாப்பு எனறு
    திடமது உரை செய்தான் உறுதியாக உபதேசித்தவனும்
    தொல்லை வடமதுரையான் திறத்து பழமையான வட மதுரையில் பிறந்த திருமாலிடம்
    செல்வம் , உயிர் செல்வங்களையும் , உயிரையும் ,
    உடம்பு , சேர உரித்தாக்கி உடம்பையும் ஒரு சேர உரியவன் ஆக்கி
    வல்வினையை நீக்குமினோ வலிய இரு வினைகளை விலக்குங்கள்


    V.Sridhar
    Last edited by sridharv1946; 24-11-13, 20:49.
Working...
X