Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 114/116 வைகுந்த&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 114/116 வைகுந்த&#

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 114/116 வைகுந்தம் பெறுவார் சீர்சொல்ல எளிதோ ?

    திருப்பதி - 108/108 திரு நாடு - 1/1 : பரம பதம்

    இடர் உடையேன் சொல்ல எளிதோ? பிரமன்
    அடரும் விடையோற்கும் அரிதே - தொடரும்
    கரு வைகும் தம் பிறவி கட்டு அறுத்து , மீளாத்-
    திருவைகுந்தம் பெறுவார் சீர்

    பதவுரை :

    தொடரும் வினைப் பயன் காரணமாகத் தொடர்ந்து வருவதும் ,
    கரு வைகும் கருவில் பிரவேசிப்பதற்குக் காரணமுமான
    தம் பிறவி கட்டு அறுத்து தமது பிறவிப் பந்தத்தை ஒழித்து ,
    மீளாத் திருவைகுந்தம் திரும்பி வர முடியாத ஸ்ரீ வைகுண்டத்தை
    பெறுவார் சீர் அடைபவர்களது சிறப்பை
    பிரமன் பிரமனும் ,
    அடரும் விடையோற்கும் போர் புரியும் எருதை வாகனமாக உடைய சிவனும்
    அரிதே சொல்ல முடியாது என்றால்
    இடர் உடையேன் இவ்வுலகில் துன்பப்படும் நான்
    சொல்ல எளிதோ விவரிக்க முடியுமோ ?

    V.Sridhar
Working...
X