Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 115/116 திருப்ப&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 115/116 திருப்ப&

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 115/116 திருப்பதி துதிப்பார் திருவடி என் தலை மேல் !


    தற்சிறப்புப் பாயிரம் 1/2


    மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்
    எண்ணு திருப்பதி நூற்றெட்டினையும் - நண்ணியே ,
    கற்பார் , துதிப்பார் , கருதுவார் , கேட்டிருப்பார் ,
    பொற்பாதம் என் தலை மேல் பூ


    பதவுரை :


    மண்ணில் நில உலகில்
    அரங்கம் முதல் திரு அரங்கம் பெரிய கோவில் முதல்
    வைகுந்த நாடளவும் பரம பத நாடு ஈறாக
    எண்ணு திருப்பதி நன்கு மதிக்கப்படுகின்ற திருமால் திருப்பதிகள்
    நூற்றெட்டினையும் நூற்றெட்டினையும்
    நண்ணியே சென்று சேர்பவர்களும்
    கற்பார் வாயினால் சொல்லுபவர்களும்
    துதிப்பார் தோத்திரம் செய்வோரும்
    கருதுவார் மனதினால் நினைப்பவர்களும்
    கேட்டிருப்பார் பிறர் சொல்லக் கேட்பவர்களமாகிய பக்தர்களுடைய
    பொற்பாதம் அழகிய திருவடிகள்
    என் தலை மேல் பூ என் முடியில் சூடும் மலர்கள் ஆகும்



    --
    V.Sridhar
Working...
X