Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 2/114 நாளும் தமியேனுக்க

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 2/114 நாளும் தமியேனுக்க

    5. திருவரங்கத்து மாலை - 2/114 நாளும் தமியேனுக்குத் துணை வருவது யார் ?

    சிறப்புப் பா/யிரம் 2/2

    நாளும் பெரிய பெருமாள் அரங்கர் நகை முகமும் ,
    தோளும் தொடர்ந்து என்னை ஆளும் விழியும் , துழாய் மணக்கும்
    தாளும் , கரமும் , கரத்தில் சங்கு , ஆழியும் , தண்டும் , வில்லும் ,
    வாளும் துணை வருமே தமியேனை வளைந்து கொண்டே ?

    பதவுரை :

    பெரிய பெருமாள் அரங்கர் பெரிய பெருமாள் எனப்படும் ஸ்ரீ ரங்க நாதனுடைய
    நகை முகமும் புன்னகை புரியும் திரு முகமும் ,
    தோளும் திருத்தோள்களும் ,
    தொடர்ந்து என்னை ஆளும் விழியும் விடாது என்னை அடிமை கொள்ளும் திரு விழிகளும் ,
    துழாய் மணக்கும் தாளும் துளசி வாசனை வீசும் திருவடிகளும் ,
    கரமும் கரத்தில் திருக்கைகளும் , கரத்தில் சங்கு சக்கரமும் ,
    சங்கு ஆழியும் பாஞ்ச ஜன்யம் எனும் சங்கும் , சுதர்சனம் எனும் சக்கரமும்
    தண்டும் கௌமோதகீ எனும் கதையும் ,
    வில்லும் சார்ங்கம் எனும் வில்லும் ,
    வாளும் , நந்தகம் எனும் வாளும்
    தமியேனை வளைந்து கொண்டே துணை இல்லாத அடியேனைச் சூழ்ந்து கொண்டு
    நாளும் துணை வருமே எப்போதும் துணையாக வரும்

    --
    V.Sridhar
Working...
X