Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 10/114 : அரங்கேசரிடமிருந்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 10/114 : அரங்கேசரிடமிருந்

    5. திருவரங்கத்து மாலை - 10/114 :அரங்கேசரிடமிருந்து அனைவரும் உதித்தனர் !
    திண் சுடர் ஆழி அரங்கேசர் , திக்கு , திருச்செவியில் ;
    மண் , கழலில் ; சத்ய லோகம் , சிரத்தில் ; மருத்து , உயிரில் ;
    தண் கதிர் , உள்ளத்தில் ; வான் , உந்தியில் ; செந்தரணி , கண்ணில் ;
    ஒண் கனல் , இந்திரன் வாழ் முக போதில் - உதித்தனரே

    பதவுரை :

    திண் சுடர் ஆழி வலிமையையும் ஒளியையும் உடைய சக்ராயுதத்தை ஏந்திய
    அரங்கேசர் திரு அரங்க நாதருடைய
    திருச்செவியில் திக்கு அழகிய காதிலிருந்து திக்குகளும் ,
    கழலில் மண் திருவடிகளிலிருந்து பூமியும் ,
    சிரத்தில் சத்ய லோகம் திரு முடியிலிருந்து சத்ய லோகமும் ,
    உயிரில் மருத்து உயிரிலிருந்து வாயுவும் ,
    உள்ளத்தில் தண் கதிர் மனத்திலிருந்து குளிர்ந்த கதிருடைய சந்திரனும் ,
    உந்தியில் வான் திரு நாபியிலிருந்து வானமும் ,
    கண்ணில் செந்தரணி கண்ணிலிருந்து சிவந்த சூரியனும் ,
    வாழ் முக போதில் சிறந்த தாமரை மலர் போன்ற முகத்திலிருந்து
    ஒண் கனல் இந்திரன் ஒளியுள்ள அக்னியும் , இந்திரனும்
    உதித்தனரே ஆதியில் தோன்றினார்கள்


    V.Sridhar

Working...
X