Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 14/114 :அரங்கன் உந்தி மலரி&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 14/114 :அரங்கன் உந்தி மலரி&#

    5. திருவரங்கத்து மாலை - 14/114 :அரங்கன் உந்தி மலரில் , பிரமன் ஓர் பிரமரம் !

    புறக்குன்று , புல் இதழ் ; முந்நீர் , பிரசம் ; பொரு இல் செம்பொன்

    நிறக் குன்று , கன்னிகை ; எண் கிரி , தாது ; நிலம் , அதனுள்
    பிறக்கும் துகள் ; முது மாசுணம் , நாளம் ; பிரமன் , வண்டு ;
    சிறக்கும் திகிரி அரங்கேசர் உந்திச் செழு மலர்க்கே .

    பதவுரை :

    சிறக்கும் திகிரி மேன்மை உடைய சக்கராயுதம் ஏந்திய
    அரங்கேசர் உந்தி திரு அரங்க நாதருடைய திரு நாபியில் தோன்றிய
    செழு மலர்க்கே செழுமையான தாமரை மலர்க்கு
    புறக்குன்று புல் இதழ் கடலுக்கு அப்பால் உள்ள சக்கரவாள மலை புற இதழாம் ;
    முந்நீர் பிரசம் கடல் தேனாம் ;
    பொரு இல் செம்பொன் ஒப்பில்லாத சிவந்த பொன் மயமான
    நிறக் குன்று கன்னிகை ஒளி உடைய மா மேரு மலை கொடடையாம் ;
    எண் கிரி தாது எட்டு குல பர்வதங்கள் அக இதழ்களாம் ;
    நிலம் அதனுள் பிறக்கும் துகள் பூமி அதனுள் தோன்றும் மகரந்தப் பொடியாம் ;
    முது மாசுணம் நாளம் பழமையான பெரும் ஆதி சேஷன் எனும் அம்பு தண்டாம் ;
    பிரமன் வண்டு பிரம்மா வண்டு ஆவான் .

    V.Sridhar


Working...
X