Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 15/114 : ஆக்குவதும் , அளிப்ப

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 15/114 : ஆக்குவதும் , அளிப்ப

    5. திருவரங்கத்து மாலை - 15/114 : ஆக்குவதும் , அளிப்பதும் , அழிப்பதும் அரங்கனே !

    இருகூலமும் பொரு மா நீர் அரங்கத்தில் எந்தை , அம் தண்
    முருகு ஊர் கமல் முனி ஆய் , வகுக்கும் முறைமையினால் ,
    புருகூதனுக்குத் திருத்தம்பி ஆகி , புரக்கும் ; உமை
    ஒரு கூறு கொண்ட அரன் ஆய் , அழிக்கும் உகாந்தத்திலே

    பதவுரை :

    இருகூலமும் பொரு மா நீர் இரு கரைகளையும் மோதும் காவிரி நீரால்
    அரங்கத்தில் எந்தை சூழப்பட்ட திருவரங்கத்தில் இருக்கும் எம்பெருமான்
    அம் தண் முருகு ஊர் அழகிய , குளிர்ந்த வாசனை மிகுந்த
    கமல முனி ஆய் தாமரை மலரில் இருக்கும் பிரமன் ஆகி
    வகுக்கும் முறைமையினால் முறைப்படிப் படைத்து அருள்வான் ;
    புருகூதனுக்குத் திருத்தம்பி ஆகி தேவேந்திரனுக்குத் தம்பியாகத் தோன்றி
    புரக்கும் காத்து அருள்வான் ;
    உமை ஒரு கூறு கொண்ட பார்வதியை உடலில் பாதியாகக் கொண்ட
    அரன் ஆய் அழிக்கும் உகாந்தத்திலே சிவன் ஆகி யுக முடிவில் அழித்து அருள்வான் .


    V.Sridhar

Working...
X