Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 16/114 : அரங்கன் அண்டங்களை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 16/114 : அரங்கன் அண்டங்களை

    5. திருவரங்கத்து மாலை - 16/114 : அரங்கன் அண்டங்களை அப்பில் குமிழ் என ஆக்கினான் !

    வாரித் தலமும் , குல பூ தரங்களும் , வானும் உள்ளே
    பாரித்து வைத்த இவ்வண்டங்கள் யாவும் படைக்க , முன் நாள்
    வேரிப் பசுந்தண் துழாய் அரங்கேசர் விபூதியிலே ,
    மூரிப் புனலில் , குமிழ்கள் போல் முளைத்தனவே

    பதவுரை :

    வாரித் தலமும் கடல் சூழ்ந்த உலகங்களையும் ,
    குல பூ தரங்களும் பூமியைத் தாங்கும் சிறந்த மலைகளையும்
    வானும் உள்ளே பாரித்து வைத்த வானையும் தன்னிடம் பரப்பி வைத்துள்ள
    இவ்வண்டங்கள் யாவும் இந்த அண்டங்கள் யாவும்
    முன் நாள் ஆதி காலத்தில்
    வேரிப் பசுந்தண் துழாய் தேனை உடைய பசுமையான குளிர்ந்த திருத்துழாய் மாலை
    அரங்கேசர் படைக்க அணிந்த திரு அரங்க நாதர் படைத்தவுடன்
    விபூதியிலே அவருடைய லீலா விபூதியிலே
    மூரிப் புனலில் பெரு வெள்ளத்தில் குமிழ்த்த
    குமிழ்கள் போல் முளைத்தனவே நீர்க் குமிழிகள் போல் ஒரே கணத்தில் தோன்றின


    V.Sridhar

    Last edited by sridharv1946; 28-11-13, 20:37.
Working...
X