Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 17/114 : அரங்கன் ஆணையால் அன&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 17/114 : அரங்கன் ஆணையால் அன&

    5. திருவரங்கத்து மாலை - 17/114 : அரங்கன் ஆணையால் அனைத்தும் அடங்கும் !

    நெடும் கடல் நிற்பதும் , நாயிறு காய்வதும் , நிற்றலும் , கால்
    ஒடுங்கி நடப்பதும் , தண் கார் பொழிவதும் , ஊழி தனில்
    சுடும் கனல் பற்றிச் சுடாதே இருப்பதும் , தும்பை புனைந்து
    ஆடும் கனல் ஆழி அரங்கேசர் தம் திருவாணையினே

    பதவுரை :

    நிற்றலும் நாள் தோறும்
    நெடும் கடல் நிற்பதும் பெரிய கடல் பொங்காமல் கரைக்குள் அடங்கி நிற்பதும் ,
    நாயிறு காய்வதும் சூரியன் தவறாமல் வந்து வெயில்காய்வதும் ,
    கால் ஒடுங்கி நடப்பதும் காற்று உலகு பொறுக்கும் அளவுக்கு அடங்கி வீசுவதும் ,
    தண் கார் பொழிவதும் குளிர்ந்த மேகங்கள் நேரத்தில் மழை பொழிவதும் ,
    ஊழி தனில் கற்பாந்த காலத்தில்
    சுடும் கனல் உலகைச் சுட்டெரிக்கும் படபாமுகாக்கினி
    பற்றிச் சுடாதே இருப்பதும் அது வரை பற்றிக்கொண்டு சுட்டு அழிக்காமல் இருப்பதும்
    தும்பை புனைந்து தும்பைப் பூ மாலை சூட்டிக் கொண்டு
    அடும் கனல் ஆழி கொடியவர்களை அழிக்கும் எரிக்கும் சக்கராயுதம் ஏந்திய
    அரங்கேசர் தம் திருவாணையினே திரு அரங்கநாதரது திரு ஆணையாலே

    V.Sridhar

Working...
X