Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 21/114 : அரங்கன் உந்திக் கம&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 21/114 : அரங்கன் உந்திக் கம&

    5. திருவரங்கத்து மாலை - 21/114 :அரங்கன் உந்திக் கமலம் விரிந்தால் அண்டம் விரியும் !

    பந்திக் கமலத் தடம் சூழ் அரங்கர் படைப்பு , அழிப்பு
    சிந்தித்திடுவ்தும் இல்லை கண்டீர் ; அத் திசைமுகனோடு
    உந்திக் கமலம் விரிந்தால் , விரியும் ; யுகக்கடையில்
    முந்திக் குவியில் , உடனே குவியும் இம் மூதண்டமே

    பதவுரை :

    பந்திக் கமலத் தடம் சூழ் வரிசையாகத் தாமரை மலர்ந்த தடாகம் சூழ்ந்த
    அரங்கர் திரு அரங்க நாதர்
    படைப்பு , அழிப்பு படைப்பு , அழிப்புகளைப பற்றி
    சிந்தித்திடுவ்தும் இல்லை கண்டீர் நெஞ்சினால் நினைப்பதே இல்லை
    அத் திசைமுகனோடு உந்திக் கமலம் பிரமனோடுஅரங்கனின் நாபித்தாமரை
    விரிந்தால் , விரியும் மலர்ந்தால் , அண்டங்கள் தோன்றும் ;
    யுகக்கடையில் கற்பாந்த காலத்தில்
    முந்திக் குவியில் முன்னே பிரமனுடன் உந்தித் தாமரை மூடினால்
    இம் மூதண்டமே உடனே குவியும் இந்த அண்டங்கள் உடனே ஒடுங்கிவிடும்


    V.Sridhar


Working...
X