Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 22/114 : காரணர் பூமியில் கி&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 22/114 : காரணர் பூமியில் கி&

    5. திருவரங்கத்து மாலை - 22/114 :காரணர் பூமியில் கிடந்தார் , இடந்தார் , கடந்தார் !

    அடந்தை நடந்தை வனம் சூழ் அரங்கத்து , அரவணை மேல்
    கிடந்தனர் ; துங்கக் கிரி மிசை நின்றனர் ; கேடில் ஒன்றாய்
    இடந்தனர் ; மீள விழுங்கினர் ; கான்றன ; ஈரடியால்
    கடந்தனர் ; கை வழி மண் ஆனது இந்த மண் காரணர்க்கே

    பதவுரை :

    அடந்தை நடந்தை வனம் சூழ் அடந்தை , நடந்தை எனும் சோலைகள் சூழ்ந்த
    அரங்கத்து திரு அரங்கத்தில்
    அரவணை மேல் கிடந்தனர் ஆதிசேஷனாகிய படுக்கையில் பள்ளி கொண்டார் ;
    துங்கக் கிரி மிசை நின்றனர் உயர்ந்த திரு வேங்கட மலையில் நின்று அருளினார் ;
    கேடில் ஒன்றாய் ஒப்பற்ற வராஹ அவதாரம் ஆகி
    இடந்தனர் கொம்பினால் குத்தி எடுத்தார் ;
    மீள விழுங்கினர் பின்பு கற்பாந்த காலத்தில் விழுங்கி அருளினார் ;
    கான்றன கற்பத் தொடக்கத்தில் மீண்டும் உமிழ்ந்து அருளினார் ;
    ஈரடியால் கடந்தனர் ராம அவதாரத்தில் இரண்டு திருவடிகளால் நடந்தார் ;
    காரணர்க்கே எல்லாவற்றிற்கும் காரணம் ஆன எம்பெருமானுக்கு
    இந்த மண் இந்த பூமி
    கை வழி மண் ஆனது குயவன் கையில் வழிக்கும் மண் போல உரிமையாக உள்ளது

    V.Sridhar

Working...
X