Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 25/114 : ஸ்ரீ கூர்ம அவதார வை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 25/114 : ஸ்ரீ கூர்ம அவதார வை

    5. திருவரங்கத்து மாலை - 25/114 : ஸ்ரீ கூர்ம அவதார வைபவம் 1/3

    பாட்டுக்கும் முத்தமிழ் வில்லிபுத்தூர் வரும் பாவை குழற்-
    சூட்டுக்கும் நல்லவர் தென் அரங்கேசர் தொடு கடல் வாய்
    மோட்டுக் கமடத் திரு உரு ஆகி முது முகில்
    கோட்டுச் சயிலம் உழுவது என்னாத் துயில் கொண்டனரே

    பதவுரை :

    முத்தமிழ் இயல் , இசை , நாடகம் எனப்படும் மூன்று தமிழும் வழங்கும்
    வில்லிபுத்தூர் வரும் ஸ்ரீ வில்லிபுத்தூரில் பெரியாழ்வார் மகளாய் அவதரித்த
    பாவை பாட்டுக்கும் ஸ்ரீ ஆண்டாளுடைய பாமாலைக்கும் ,
    குழற்சூட்டுக்கும் அவள் தன் கூந்தலில் சூடிக் கொடுத்த பூமாலைக்கும்
    நல்லவர் திருவுள்ளம் உகந்தவராகிய
    தென் அரங்கேசர் அழகிய திரு அரங்க நாதர்
    தொடு கடல் வாய் கடையப்படும் பாற்கடலில்
    மோட்டுக் கமடத் திரு உரு ஆகி உயர்ந்த ஆமை வடிவம் ஆகி
    முது முகில் வலிய தன முதுகில்
    கோட்டுச் சயிலம் சிகரங்களை உடைய மந்தர பர்வதம்
    உழுவது என்னாத் தினவு சொறிவது என்று எண்ணி
    துயில் கொண்டனரே யோக நித்திரை செய்தார்

    அடுத்து வருவது : ஸ்ரீ கூர்ம அவதார வைபவம் 2/3

    V.Sridhar

    Last edited by sridharv1946; 30-11-13, 13:12.
Working...
X