Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 29/114 : ஸ்ரீ வராஹ அவதார வைப

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 29/114 : ஸ்ரீ வராஹ அவதார வைப

    5. திருவரங்கத்து மாலை - 29/114 : ஸ்ரீ வராஹ அவதார வைபவம் 2/3

    டமான் விரும்பும் மதில் அரங்கர் பெருமை மாணப் பெரிது !

    மருமலர்க் கோயில் மடமான் விரும்பும் மதில் அரங்கர்
    பெருமையைப் பேசுவது எப்படி நாம் - பிறை வாள் எயிற்றுக்-
    கரு முகில் கோலப் பெரும் பன்றி ஆய களேபரத்தின்
    ஒரு மயிர்க் காலடி ஊடே , கடல் புக்கு ஒளிந்தனவே ?

    பதவுரை :

    பிறை வாள் எயிற்று பிறைச் சந்திரன் போன்ற ஒளிஉள்ள பற்களையும் ,
    கரு முகில் கரிய மேகம் போன்ற திருமேனியையும் உடைய
    கோலப் பெரும் பன்றி ஆய பெரிய வராஹம் ஆகிய
    களேபரத்தின் ஒரு மயிர்க் காலடி ஊடே திருமேனியின் ஒரு மயிர்க்காலின் அடியில்
    கடல் புக்கு ஒளிந்தனவே ஏழு கடல்களும் ஒளிந்தன என்றால்
    மருமலர்க் கோயில் வாசனையுள்ள தாமரையில் இருக்கும்
    மடமான் விரும்பும் மடப்பத்தை உடைய மான் போன்ற திருமகள் விரும்பும்
    மதில் அரங்கர் மதில்கள் சூழ்ந்த திருவரங்கத்தில் இருக்கும் எம்பேருமானின்
    பெருமையை நாம் பேசுவது எப்படிபெருமையை நாம் எவ்வாறு புகழ்வது ?


    அடுத்து வருவது : ஸ்ரீ வராஹ அவதார வைபவம் 3/3

    V.Sridhar



Working...
X