Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 39/114 : ஸ்ரீ வராஹனும் ஸ்ரீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 39/114 : ஸ்ரீ வராஹனும் ஸ்ரீ

    5. திருவரங்கத்து மாலை - 39/114 :ஸ்ரீ வராஹனும் ஸ்ரீ திரிவிக்ரமனும் !

    ஓலப் புனல் அரங்கேசர் பொற்றாள் பட்டு உடைந்த அண்ட

    மேலக் கடாகத தொளை வழியாக விழும் புனல் போய் ,
    கோலத் திரு உருக் கொண்ட அந்நாள் , குரம் பட்டு உடைந்த
    மூலக் கடாகத் தொளையால் விழுந்தது , முன் புனற்கே

    பதவுரை :

    ஓலப் புனல் ஆரவாரம் செய்யும் காவிர் நீரால் சூழப்பட்ட
    அரங்கேசர் திருவரங்கத்து எம்பெருமானுடைய
    பொற்றாள் பட்டு உடைந்த திரிவிக்ரமாவதாரத்தில் அழகிய திருவடி பட்டு உடைந்த
    அண்ட மேலக் கடாக அண்ட கோளத்தின் மேல் மூடியில் உண்டான
    தொளை வழியாக துளையின் வழியாக
    விழும் புனல் போய் உள்ளே விழுந்த நீர்
    கோலத் திரு உருக் கொண்ட அந்நாள் வராஹ அவதாரம் கொண்ட காலத்தில்
    குரம் பட்டு உடைந்த திருக் குளம்பு பட்டதால் உடைந்த
    மூலக் கடாகத் தொளையால் ண்ட கோளத்து அடி மூடியில் உண்டான துளையின்
    விழுந்தது முன் புனற்கே வழியாக பழைய கடலில் விழுந்து விட்டது


    அடுத்து வருவது : ஸ்ரீ பரசு ராம அவதார வைபவம் 1/1


    V.Sridhar


Working...
X