Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 47/114 : ஸ்ரீ தசரத ராம அவதார

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 47/114 : ஸ்ரீ தசரத ராம அவதார

    5. திருவரங்கத்து மாலை - 47/114 : ஸ்ரீ தசரத ராம அவதார வைபவம் 7/8

    சற்பத்து அரங்கர் நற்பத்தர் கற்பத்து அளவும் அழியார் !

    சற்பத்து உறங்கும் அரங்கா ! உன் பாதம் தனை அடைந்த
    நற்பத்தருக்கு ஒரு நாசம் உண்டோ - நல மா மருத்தின்
    வெற்பைக் கொணர்ந்த விறல் அனுமானும் , அவ் வீடணனும்
    கற்பத்து அளவும் அழியாது இருக்கவும் கற்பித்தையே ?

    பதவுரை :

    சற்பத்து உறங்கும் அரங்கா ஆதி சேஷன் யோக நித்திரை செய்யும் ரங்க நாதா !
    நல் மா மருத்தின் வெற்பை நன்மையைத் தரும் சஞ்சீவி பர்வத்த்தை
    கொணர்ந்த விறல் அனுமானும் கொண்டு வந்த வலிமை உடைய அனுமானும் ,
    அவ் வீடணனும் அந்த விபீஷணனும்
    கற்பத்து அளவும் உலகம் முடியும் வரையிலும்
    அழியாது இருக்கவும் கற்பித்தையே இறவாமல் இருக்க ஆணை இட்டாயே
    உன் பாதம் !தனை அடைந்த உன் திருவடிகளை அடைந்த
    நற்பத்தருக்கு ஒரு நாசம் உண்டோ நல்ல அடியார்களுக்கு அழிவு உண்டோ ? (இல்லை)

    அடுத்து வருவது : ஸ்ரீ தசரத ராம அவதார வைபவம் 8/8

    V.Sridhar


Working...
X