Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 48/114 : ஸ்ரீ தசரத ராம அவதார

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 48/114 : ஸ்ரீ தசரத ராம அவதார

    5. திருவரங்கத்து மாலை - 48/114 : ஸ்ரீ தசரத ராம அவதார வைபவம் 8/8

    அரங்கன் அருளால் அயோத்தி சராசரங்கள் வைகுந்தம் ஆர்ந்திட்டவே

    ஆவும் , பயமும் , அமுதும் , ஒப்பு ஆன அரங்கர்க்கு

    மேவும் புகழ் இன்னும் மேவும் கொலோ - அவர் மெய் அருளால்
    தாவும் தரங்கத் தடம் சூழ் அயோத்திச் சராசரங்கள்
    யாவும் கிளையுடன் வைகுந்த யோகத்தில் ஆர்ந்திட்டவே

    பதவுரை :

    ஆவும் பயமும் அமுதும் பசுவையும் , அதன் பாலையும் , அதன் இனிமையையும்
    ஒப்பு ஆன அரங்கர்க்கு போல் உள்ள அரங்க நாதர் ஆகிய ராமனுக்கு
    மேவும் புகழ் உண்டான புகழ்
    இன்னும் மேவும் கொலோ வேறு யாருக்கேனும் உண்டாகுமோ ? (ஆகாது)
    தாவும் தரங்கத் தடம் சூழ் எழுந்து வரும் அலைகளை உடைய தடாகங்கள் சூழ்ந்த
    அயோத்தி அயோத்தியில் உள்ள
    சராசரங்கள் யாவும் அசையும் அசையாப் பொருள்கள் எல்லாம்
    கிளையுடன் தத்தம் சுற்றத்துடனே
    அவர் மெய் அருளால் அந்த ராமனது பழுதற்ற கருணையால்
    வைகுந்த யோகத்தில் வைகுந்த உலகத்தில்
    ஆர்ந்திட்டவே சென்று சேர்ந்திட்டன

    அடுத்து வருவது : ஸ்ரீ பல ராம அவதார வைபவம் 1/2


    V.Sridhar

    Last edited by sridharv1946; 05-12-13, 20:36.
Working...
X