Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 49/114 : ஸ்ரீ பல ராம அவதார வĭ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 49/114 : ஸ்ரீ பல ராம அவதார வĭ

    5. திருவரங்கத்து மாலை - 49/114 : ஸ்ரீ பல ராம அவதார வைபவம் 1/2

    ஒரு தாய் இருந்து வருந்த , வைதேகியுடன் சுரத்தில்
    ஒரு தாய் சொலச் சென்ற தென் அரங்கா ! வையம் உய்யும் வண்ணம்
    ஒரு தாய் உதரத்தில் ஓர் ஆறு திங்கள் உறைந்த பின்னை ,
    ஒரு தாய் வயிற்றில் வந்து உற்றது எம் மாயம் ? உரைத்து அருளே

    பதவுரை :

    ஒரு தாய் சொல ஒரு தாய் ஆன கைகேயி சொன்னதால்
    ஒரு தாய் இருந்து வருந்த மற்ற தாய் கோசலை அயோத்தியில் இருந்து வருந்தும்படி
    வையம் உய்யும் வண்ணம் உலகத்தினர் துன்பம் இலாது வாழும் பொருட்டு
    வைதேகியுடன் சுரத்தில் சீதையுடன் கொடிய காட்டிற்கு
    சென்ற தென் அரங்கா ! சென்ற அழகிய அரங்க நாதனே !
    ஒரு தாய் உதரத்தில் தேவகித் தாயின் வயிற்றில்
    ஓர் ஆறு திங்கள் உறைந்த பின்னை ஆறு மாத காலம் வசித்த பின்பு
    ஒரு தாய் வயிற்றில் வந்து உற்றது ரோஹிணியின் வயிற்றில் வந்து சேர்ந்தது
    எம் மாயம் ? உரைத்து அருளே என்ன மாயை ? சொல்லி அருள்வாயாக


    அடுத்து வருவது : ஸ்ரீ பல ராம அவதார வைபவம் 2/2


    V.Sridhar



Working...
X