Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 50/114 : ஸ்ரீ பல ராம அவதார வĭ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 50/114 : ஸ்ரீ பல ராம அவதார வĭ

    5. திருவரங்கத்து மாலை - 50/114 : ஸ்ரீ பல ராம அவதார வைபவம் 2/2

    பலராமர் அலத்தால் நூற்றுவர் பதி பட்ட பாடு பகர இயலாது !

    கதி பட்ட பொன்னி அரங்கேசர் ஆடு கரும் திரை நீர்
    நதி பட்ட பாடு நவின்றிடல் ஆகும் ? நலம் கெழுகூர்
    நுதி பட்ட நெட்
    டு அலத்தாலே இழிந்திட , நூற்றுவர் தம்
    பதி பட்ட கண் கலக்கம் தெரியாது , பகருதற்கே

    பதவுரை :

    கதி பட்ட பொன்னி வேகமாக ஓடும் காவேரி நதியால் சூழப்பட்ட
    அரங்கேசர் திரு அரங்கத்தில் இருக்கும் ரங்க நாதன்
    ஆடு பல ராமாவதார காலத்தில் நீராடும்
    கரும் திரை நீர் நதி கடுமையான அலைகளை உடைய யமுனை ஆறு
    பட்ட பாடு அவர் கலப்பை கொண்டு இழுத்ததால் பட்ட துன்பம்
    நவின்றிடல் ஆகும் சொல்ல இயலும் ;
    நலம் கெழு கூர் நுதி பட்டநன்மை மிக்க கூரிய நுனி பொருந்திய
    நெட்டு அலத்தாலே இழிந்திட நீண்ட கலப்பையாலே இழுத்ததால்
    நூற்றுவர் தம் பதி துரியோதநாதியரது அஸ்தினாபுரம்
    பட்ட கண் கலக்கம் அடைந்த துன்பம்
    தெரியாது பகருதற்கே சொல்வதற்குத் தெரியாது

    அடுத்து வருவது : ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் 1/25



    V.Sridhar

    Last edited by sridharv1946; 06-12-13, 19:10.
Working...
X