Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 58/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 58/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார

    5. திருவரங்கத்து மாலை - 58/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் 8/25

    ஆயர் எல்லாம் பரம பதத்தில் போய் எஞ்ஞன் மீண்டதுவே ?

    வானாடரில் சிலர் சென்று கண்டார் இல்லை ; மற்று அதனில்
    போனாரில் மீள வந்தார் இல்லை - பூவின் மங்கை
    ஆனாத செல்வத் திரு அரங்கா ! - கொச்சை ஆயர் எல்லாம்
    மேனாள் பரம பதத்தில் போய் எஞ்ஞன் மீண்டதுவே ?

    பதவுரை :


    பூவின் மங்கை தாமரை மலரில் தோன்றிய திருமகளது
    ஆனாத செல்வத் திரு அரங்கா நீங்காத செல்வத்தை உடைய திரு அரங்கா !
    வானாடரில் சிலர் தேவ லோகத்தில் உள்ளவர்களில் சிலர்
    சென்று கண்டார் இல்லை பரம பதத்தைப் போய்ப் பார்த்தவர் இல்லை ;
    மற்று அதனில் போனாரில் அங்கு சென்றவர்களில்
    மீள வந்தார் இல்லை திரும்பவும் பூமிக்கு வந்தவர் யாரும் இல்லை ;
    கொச்சை ஆயர் எல்லாம் கீழ்மையான இடையர்கள் எல்லோரும்
    மேனாள் பரம பதத்தில் போய் முன்பு பரம பதம் சென்று
    எஞ்ஞன் மீண்டதுவே மறுபடியும் மறுபடியும் திரும்பி வந்தது எவ்வாறு ?



    அடுத்து வருவது : ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் 9/25

    V.Sridhar

Working...
X