Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 63/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 63/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார

    5. திருவரங்கத்து மாலை - 63/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் 13/25

    நாமம் மிகு புகழ் யாதவர் வாழும் நகரில் , உம்பர்
    தாம் மருவும் சவை தத்தம் ஆய - தளை அவிழும்
    தேமரு பொங்கர் அரங்கேசர் , 'உக்கிர சேனனுக்கு
    மா முடி வைக்கும்படி , அடி மேல் கொடு வா' எனவே

    பதவுரை

    தளை அவிழும் அரும்புகள் கட்டு அவிழ
    தே மரு பொங்கர் தேன் பொருந்திய சோலைகளை உடைய
    அரங்கேசர் திரு அரங்க நாதர்
    உக்கிர சேனனுக்கு 'தன் தாத்தா உக்ரசேன மகா ராஜாவிற்கு
    மா முடி வைக்கும்படி பெரிய கிரீடத்தை சூட்டிப் பட்டாபிஷேகம் செய்யும்படி
    டி மேல் கொடு வா இந்த பூமியின் மேல் கொண்டு வா '
    எனவே என்று வாயு தேவனிடம் நியமித்த உடன்
    நாமம் மிகு புகழ் பேர் மிகுந்த , கீர்த்தியை உடைய
    யாதவர் வாழும் நகரில் யாதவர் வாழும் வட மதுரை நகரில்
    உம்பர் தாம் மருவும் தேவர்கள் வீற்றிருந்த இடம் ஆகிய
    சவை தத்தம் ஆய சுதர்மை எனும் மண்டபம் தங்கள் தங்களது ஆயிற்று

    V.Sridhar

    Last edited by sridharv1946; 09-12-13, 19:56.
Working...
X