Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 65/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 65/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார

    5. திருவரங்கத்து மாலை - 65/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் 15/25

    நறைத் துளவம் புனை நம் பெருமாள் விறல் நாம் சொல்வதோ ?
    மறைப் பரி பூட்டிய மாநிலத் தேர் இல்லை ; வாள் எயிற்றின்
    கறைப் பணி நாண் உடை மேரு வில் இல்லை ; கடும் பவனச்-
    சிறைத தழல் அம்பு இல்லை - ஒன்னார் அறு புரம் செற்றதற்கே

    பதவுரை :

    ஒன்னார் அறு புரம் செற்றதற்கே பகைவர்களுடைய ஆறு நகரங்களை அழித்ததற்கு
    (சிவன் மூன்று நகரங்களை எரித்தது போல்)
    மறைப் பரி பூட்டிய நான்கு வேதங்கள் ஆகிய குதிரை பூட்டிய
    மாநிலத் தேர் இல்லை பெரிய பூமியாகிய தேர் இல்லை ;
    வாள் எயிற்றின் வாள் போன்ற பற்களையும்
    கறைப் பணி நாண் உடை நஞ்சையும் உடைய பாம்பு ஆகிய நாணை உடைய
    மேரு வில் இல்லை மகா மேரு ஆகிய வில் இல்லை ;
    கடும் பவனச் சிறை கடிய காற்றுப் போன்ற வேகமான இறகுகளை உடைய
    தழல் அம்பு இல்லை நெருப்பைக் கக்கும் அம்புகள் இல்லை ;
    நறைத் துளவம் புனை மணம் உள்ள திரு த்துழாய் மாலை சூடிய
    நம் பெருமாள் விறல் நம் பெருமாளது வல்லமையை
    நாம் சொல்வதோ நம்மால் சொல்ல முடியுமா ?

    V.Sridhar
Working...
X