Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 77/114 : ஸ்ரீ கல்கி அவதாரம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 77/114 : ஸ்ரீ கல்கி அவதாரம்

    5. திருவரங்கத்து மாலை - 77/114 :ஸ்ரீ கல்கி அவதாரம்

    தருமம் தவிர்ந்து , பொறை கெட்டு , சத்தியம் சாய்ந்து , தயை
    தெருமந்து , தன பூசனை முழுதும் சிதைய , கலியே
    பொரும் அந்தக் காலக் கடையினில் எம் பொன் - அரங்கன் அல்லால்
    அருமந்த கற்கி என்று ஆரே , அவை நிலை ஆக்குவரே

    பதவுரை :

    தருமம் தவிர்ந்து தருமங்கள் விட்டு விலகி ,
    பொறை கெட்டு பொறுமை அழிந்து ,
    சத்தியம் சாய்ந்து உண்மை ஒழிந்து ,
    தயை தெருமந்து அன்பு நிலை கலங்கி ,
    தன் பூசனை முழுதும் சிதைய தனது பூஜை முற்றும் கெட ,
    கலியே பொரும் பாவமே வெல்லும் ,
    அந்தக் காலக் கடையினில் அந்தக் கலி யுகத்து முடிவில் ,
    எம் பொன் அரங்கன் அல்லால் எமது அழகிய திரு அரங்க நாதன் அல்லாமல்
    அருமந்த கற்கி என்று தேவாமிருதத்தைப் போன்ற கற்கி எனும் அவதாரம் எடுத்து
    ஆரே அவை நிலை ஆக்குவரே வேறு யார் தாம் நிலை பெறச் செய்வார் ?

    V.Sridhar
    Last edited by sridharv1946; 13-12-13, 14:06.
Working...
X