5. திருவரங்கத்து மாலை - 79/114 : அரங்கர் தம் உண்மை !
5. திருவரங்கத்து மாலை - 79/114 : அரங்கர் தம் உண்மை !
உம்பர்க்கு அரிய பெருமாள் அரங்கர் தம் உண்மை எல்லாம் இம்பர்க்கு உலகில் வெளியிடவே - 'சரண் இல்லை' என்று ஓர் கும்பக் கடக் கயம் கூப்பிடச் சென்றதும் , கோளரியாய்த்- தம்பத்து உதித்ததும் , தாழிக்கு வீட்டினைத் தந்ததுமே
பதவுரை :
ஓர் கும்பக் கடக் கயம் குடம் போன்ற மத்தகத்தை உடைய ஒரு கஜேந்திரன் , சரண் இல்லை என்று கூப்பிட "வேறு சரணம் இல்லை" என்று அழைக்க , சென்றதும் உடனே நீ அங்கு விரைந்து சென்றதும் , கோளரியாய் வலிமை உடைய நரசிங்கமாய் , தம்பத்து உதித்ததும் கம்பத்திலிருந்து தோன்றியதும் , தாழிக்கு ததி பாண்டனுடைய தயிர்த் தாழிக்கு , வீட்டினைத் தந்ததுமே பரம பதத்தை அளித்ததும் , உம்பர்க்கு அரிய பெருமாள் தேவர்களுக்கும் காண முடியாத பெரிய பெருமாள் ஆன அரங்கர் திரு அரங்க நாதனின் தம் உண்மை எல்லாம் தத்துவத்தின் இரகசியங்களை எல்லாம் இம்பர்க்கு உலகில் இவ்வுலகத்தில் உள்ளவர்களுக்கு வெளியிடவே வெளிப் படுத்தி விட்டன
Bookmarks