Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 79/114 : அரங்கர் தம் உண்மை !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 79/114 : அரங்கர் தம் உண்மை !

    5. திருவரங்கத்து மாலை - 79/114 : அரங்கர் தம் உண்மை !

    உம்பர்க்கு அரிய பெருமாள் அரங்கர் தம் உண்மை எல்லாம்
    இம்பர்க்கு உலகில் வெளியிடவே - 'சரண் இல்லை' என்று ஓர்
    கும்பக் கடக் கயம் கூப்பிடச் சென்றதும் , கோளரியாய்த்-
    தம்பத்து உதித்ததும் , தாழிக்கு வீட்டினைத் தந்ததுமே

    பதவுரை :

    ஓர் கும்பக் கடக் கயம் குடம் போன்ற மத்தகத்தை உடைய ஒரு கஜேந்திரன் ,
    சரண் இல்லை என்று கூப்பிட "வேறு சரணம் இல்லை" என்று அழைக்க ,
    சென்றதும் உடனே நீ அங்கு விரைந்து சென்றதும் ,
    கோளரியாய் வலிமை உடைய நரசிங்கமாய் ,
    தம்பத்து உதித்ததும் கம்பத்திலிருந்து தோன்றியதும் ,
    தாழிக்கு ததி பாண்டனுடைய தயிர்த் தாழிக்கு ,
    வீட்டினைத் தந்ததுமே பரம பதத்தை அளித்ததும் ,
    உம்பர்க்கு அரிய பெருமாள் தேவர்களுக்கும் காண முடியாத பெரிய பெருமாள் ஆன
    அரங்கர் திரு அரங்க நாதனின்
    தம் உண்மை எல்லாம் தத்துவத்தின் இரகசியங்களை எல்லாம்
    இம்பர்க்கு உலகில் இவ்வுலகத்தில் உள்ளவர்களுக்கு
    வெளியிடவே வெளிப் படுத்தி விட்டன

    V.Sridhar
Working...
X