Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 81/114 : எம்பெருமானது பரிக&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 81/114 : எம்பெருமானது பரிக&

    5. திருவரங்கத்து மாலை - 81/114 :எம்பெருமானது பரிகரங்கள் (ஏவலர் )
    சிங்காதனம் பொற் கிரி ; திரு மஞ்சனம் , தெய்வ விண் நீர் ;
    கொங்கு ஆர் தொடை , உடுத் தாமம் ; சுடர் உடைக் கோள் , விளக்கம் ;
    பொங்கு ஆழி மண் , திருப் போனகம் ; ஆக்கினர் - புண்டரிகை -
    தம் காதலர் , நம் பெருமாள் , அரங்கர் , தமக்கு , முன்னே

    பதவுரை :

    புண்டரிகை தம் காதலர் திருமகள் கேள்வர் ஆகிய
    நம் பெருமாள் அரங்கர் நம் பெருமாள் அரங்கர்
    முன்னே தமக்கு முற்காலத்தில் , தமக்கு
    சிங்காதனம் பொற் கிரி மேரு மலையை சிம்மாசனம் ஆகவும் ,
    திரு மஞ்சனம் தெய்வ விண் நீர் தேவ கங்கையை அபிஷேக நீர் ஆகவும் ,
    உடுத் தாமம் நக்ஷத்திரங்களின் வரிசையை
    கொங்கு ஆர் தொடை வாசனை நிறைந்த மாலை ஆகவும் ,
    சுடர் உடைக் கோள் விளக்கம் ஒளி உடைய கிரகங்களை தீபம் ஆகவும் ,
    பொங்கு ஆழி மண் பொங்கும் கடல் சூழ்ந்த பூமியை
    திருப் போனகம் ஆக்கினர் இனிய உணவு ஆகவும் செய்து கொண்டார்





    --
    V.Sridhar

Working...
X