Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 81/114 : தேவி மார்களின் சிற

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 81/114 : தேவி மார்களின் சிற

    5. திருவரங்கத்து மாலை - 82/114 :தேவி மார்களின் சிறப்பு

    தே மா மலர்க் கயம் சூழ் கோயில் மேவும் திரு அரங்கர்
    தாம் ஆதரித்த திருத் தேவி மாரில் - தரங்க உடைப்-
    பூ மாது நாளும் புரத்தே சுமந்து புரக்கும் ; மலர்
    மா மாது செல்வம் கொடுத்தே உயிர்களை வாழ்விக்குமே

    பதவுரை :

    தே மா மலர்க் கயம் சூழ் தேனை உடைய பெரிய மலர்கள் நிறைந்த தடாகம் சூழ்ந்த
    கோயில் மேவும் திரு அரங்கர் பெரிய கோயிலில் இருக்கும் அரங்க நாதர்
    தாம் ஆதரித்த திருத் தேவி மாரில் தாம் அன்பு வைத்த அழகிய இரு தேவிகளுள்
    தரங்க உடைப்பூ மாது கடலை ஆடையாக உடைய நில மகள்
    நாளும் புரத்தே சுமந்து எந்நாளும் உயிர்களை தன மேல் தாங்கி
    புரக்கும் காப்பாற்றுவாள்
    மலர் மா மாது தாமரையில் இருக்கும் திருமகள்
    செல்வம் கொடுத்தே செல்வத்தைக் கொடுத்து
    உயிர்களை வாழ்விக்குமே அவ்வுயிர்களைக் காப்பாற்றுவாள்




    V.Sridhar
    Last edited by sridharv1946; 14-12-13, 21:04.
Working...
X