Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 83/114 : திரு எட்டு எழுத்து

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 83/114 : திரு எட்டு எழுத்து

    5. திருவரங்கத்து மாலை - 83/114 :திரு எட்டு எழுத்து - பெரிய திரு மந்திரம்

    நம் பெருமாள் எழுத்து எட்டின் பெருமை நவிலுமதோ
    சம்பரன் மாயம் , புரோகிதர் சூழ்வினை , தார் அணி வாள்
    வெம் படை , மாசுணம் , மா மத வேழம் , விடம் , தழல் , கால் ,
    அம்பரமே முதலானவை பாலகனுக்கு அஞ்சினவே

    பதவுரை :

    சம்பரன் மாயம் சம்பராசுரன் செய்த மாயையும் ,
    புரோகிதர் சூழ்வினை புரோஹிதர்கள் செய்த செயல்களும் ,
    தார் அணி வெற்றி மாலை அணிந்த
    வாள் வெம் படை வாள் முதலிய கொடிய ஆயுதங்களும் ,
    மாசுணம் மா மத வேழம் பெரிய பாம்புகளும் , பெரிய மத யானைகளும் ,
    விடம் தழல் கால் நஞ்சும் , அக்கினியும் , காற்றும் ,
    அம்பரமே முதலானவை கடல் முதலியவைகளும்
    பாலகனுக்கு அஞ்சினவே எட்டெழுத்தை உச்சரித்த பிரஹலாதனுக்கு பயந்தது என்றால்
    நம் பெருமாள் நம் பெருமாள் உடைய
    எழுத்து எட்டின் பெருமை எட்டு எழுத்தின் பெருமை
    நவிலுமதோ நம்மால் சொல்ல முடியுமோ ( முடியாது)

    V.Sridhar

Working...
X