Announcement

Collapse
No announcement yet.

விவேகசிந்தாமணி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • விவேகசிந்தாமணி

    ஒப்புடன் முகம லர்ந்தே வுபசரித் துண்மை பேசிஉப்பிலாக் கூழிட் டாலு முண்பதே யமிழ்த மாகும்முப்பழ மொடுபா லன்னம் முகங்கடுத் திடுவா ராயின்கப்பிய பசியி னோடு கடும்பசி ஆகுந் தானே.

    கருத்துரைமனம் நன்கு ஒப்பி முகமலர்ச்சியுடன் உபசரித்து உண்மையாகமனம் பொருந்தி இனிமையாகப்பேசி, உப்புக்கூட இல்லாத கூழ் உணவைப்பரிமாறினாலும் அதுதான் அமிழ்தம் ஆகத்தோன்றும். அதற்குமாறாக, வாழை மா பலா முதிலிய இனிய கனிகளோடு, பாற் சோறு முதலியவற்றைக் கடுகடுப்பாக முகத்தை வைத்துக்கொண்டு உணவு இட்டால், முன்பே பிடித்த பசியோடு மேலும் அதுகடுமையான பசியினையே கொடுக்கும். பசி அதிகமாகும் என்பதாம்.

  • #2
    Re: விவேகசிந்தாமணி

    மோப்பக்குழையும் அனிச்சம் முகம் திரிந்து
    நோக்கக் குழையும் விருந்து

    Comment

    Working...
    X