Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 85/114 : திரு ஆயுதங்கள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 85/114 : திரு ஆயுதங்கள்

    5. திருவரங்கத்து மாலை - 85/114 : திரு ஆயுதங்கள்

    புடைக்கும் குட முலைப் பூ மகளார் தம் பொருட்டு முந்நீர்
    அடைக்கும் பெரிய பெருமாள் , அரங்கர் , அவர் க
    த்துப்-
    படைக்கும் கமலம் அளிக்கும் ; மின் ஆழிப் படை படைக்கும் ;
    துடைக்கும் , கதை ; முத்தி மாற்றாது நல்கும் சுரி சங்கமே

    பதவுரை :

    புடைக்கும் குட முலை பருக்கின்ற குடம் போன்ற தனங்களை உடைய
    பூ மகளார் தம் பொருட்டு சீதையை மீட்பதற்காக
    முந்நீர் அடைக்கும் கடலை அணை கட்டி அடைத்த
    பெரிய பெருமாள் அரங்கர் நம் பெருமாள் ஆன அரங்கர்
    அவர் கரத்து தனது திருக்கையில்
    படைக்கும் கமலம் அளிக்கும் தரிக்கும் தாமரை காக்கும் ;
    மின் ஆழிப் படை படைக்கும் மின்னல் போன்ற சக்கரம் படைக்கும் ;
    துடைக்கும் கதை கதாயுதம் அழிக்கும்;
    சுரி சங்கமே உள்ளே சுழியை உடைய சங்கம்
    முத்தி மாற்றாது நல்கும் பரம பதத்தை கைம்மாறு கருதாமல் கொடுக்கும்


    V.Sridhar


    Last edited by sridharv1946; 15-12-13, 20:31.
Working...
X