Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 88/114 : ஆதி சேஷன்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 88/114 : ஆதி சேஷன்

    5. திருவரங்கத்து மாலை - 88/114 : ஆதி சேஷன்

    ஓல் ஆழி சூழ் புவி உச்சியில் ஏந்தும் ; உகக் கடையில்
    கால் ஆன நற்குண மூர்த்தியைக் காலும் ; அக் காலம் எல்லாம்
    மேலா விளங்கும் , புவி மீதில் - என் தன் விழுத் துணை ஆம் ,
    மால் ஆம் , அரங்க மணவாளர் துயில் மா சுணமே

    பதவுரை :

    என் தன் விழுத் துணை ஆம் என்னுடைய சிறந்த துணை ஆகிய
    மால் ஆம் அரங்க மணவாளர் நல்ல குணங்கள் நிறைந்த அழகிய மணவாளர்
    துயில் மா சுணமே யோக நித்திரை செய்யும் பெரும் பாம்பு ஆன ஆதி சேஷன்
    ஓல் ஆழி சூழ் ஆரவாரம் செய்யும் கடல் சூழ்ந்த
    புவி உச்சியில் ஏந்தும் பூமியை தன் முடி மேல் தாங்கும் ;
    உகக் கடையில் யுகாந்த காலத்தில்
    கால் ஆன நற்குண மூர்த்தியை நற்குணங்களை உடைய காலாக்னி ருத்ர மூர்த்தியை
    காலும் தன சுவாசத்திலிருந்து உண்டாக்கும் ;
    அக் காலம் எல்லாம் அந்த பிரளய காலம் முழுவதும்
    புவி மீதில் பூமியின் மேல்
    மேலா விளங்கும் வந்து விளங்கும்

    V.Sridhar
Working...
X