Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 91/114 : சேனை முதலியார்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 91/114 : சேனை முதலியார்

    5. திருவரங்கத்து மாலை - 91/114 :சேனை முதலியார்

    ஆளில் அமரர் , அரங்கேசர் சேவைக்கு அணுகுந்தொறும்
    கோளின் திரளை விலக்கும் பிரம்பின் கொனை படலால் ,
    தோளில் அடித் தழும்பு உண்டு அச்சுரர்க்கு ; அச்சுரர் தொழலால்
    தாளில் முடித் தழும்பு உண்டு , நம் சேனைத் தலைவர்க்கே

    பதவுரை :

    ஆளில் அமரர் தேவர்கள் அடிமை செய்வதற்காக
    அரங்கேசர் சேவைக்கு நம் பெருமானுக்குத் தொண்டு செய்ய
    அணுகுந்தொறும் நெருங்கும்போது எல்லாம்
    கோளின் திரளை விலக்கும் வலிமை உடைய கூட்டத்தை விலக்குகின்ற
    பிரம்பின் சேனை முதலியாருடைய பிரம்பின்
    கொனை படலால் நுனி தாக்குதலால்
    அச்சுரர்க்கு அந்த தேவர்களுக்கு
    தோளில் அடித் தழும்பு உண்டு தோளில் பிரம்படி பட்ட காயம் உண்டு ;
    அச்சுரர் தொழலால் அந்த தேவர்கள் வணங்குவதால்
    நம் சேனைத் தலைவர்க்கே நமது சேனை முதலியார்க்கு
    தாளில் முடித் தழும்பு உண்டு திருவடிகளில் முடி பட்ட காயம் உண்டு






    --
    V.Sridhar

Working...
X