Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 95/114 : ஸ்ரீ வைகுண்டம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 95/114 : ஸ்ரீ வைகுண்டம்


    5. திருவரங்கத்து மாலை - 95/114 : ஸ்ரீ வைகுண்டம்

    எந்த உலகத்தும் மேலது ; நித்திய இன்பத்தது ;
    பந்தம் நசிப்பது ; நித்தரும் முத்தரும் பாரிப்பது ;
    முந்தை மறையின் நின்று அல்லாது , எத் தேவர்க்கும் முன்ன அரிது ;
    அந்தம் இலது - அரங்கன் மேவு வைகுந்தம் ஆனதுவே

    பதவுரை :

    அரங்கன் மேவு அரங்கன் எழுந்தருளி இருக்கும்
    வைகுந்தம் ஆனதுவே ஸ்ரீ வைகுண்ட உலகமானது
    எந்த உலகத்தும் மேலது எல்லா உலகங்களுக்கும் மேலிடத்தில் உள்ளது ;
    நித்திய இன்பத்தது எப்பொழுதும் அழியாத பேரின்பத்தை உடையது ;
    பந்தம் நசிப்பது சம்சார பந்தத்தை அழிப்பது ;
    நித்தரும் முத்தரும் பாரிப்பது நித்யர்களும் , முக்தர்களும் வாழ்வது ;
    முந்தை மறையின் நின்று அல்லாது பழமையான வேதங்களின் வழி இல்லாமல்
    எத் தேவர்க்கும் முன்ன அரிது வேறு வழியில் எந்ததேவர்க்கும் நினைக்க முடியாது ;
    அந்தம் இலது அழிவு இல்லாதது

    V.Sridhar

Working...
X