Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 98/114 : ஏழு மதில்களும் , திī

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 98/114 : ஏழு மதில்களும் , திī

    5. திருவரங்கத்து மாலை - 98/114 : ஏழு மதில்களும் , திருவரங்க விமானமும்

    தாழாது இபம் சொல்ல , வந்தார் அரங்கர் தயங்கு செம்பொற்-
    கேழா விமானம் கிளர் செம்பொன் மேரு கிரி -நிகர்த்த
    ஏழ் ஆவரணத்து இடை இடைத் தீவுகள் ; இவ் அனைத்தும்
    சூழ் ஆறு மா கடல் ; எவ்வாறு நாம் இனிச் சொல்லுவதோ ?

    பதவுரை :

    தாழாது இபம் சொல்ல கஜேந்திரன் கூப்பிட்டவுடன் தாமதம் செய்யாமல்
    வந்தார் அரங்கர் தயங்கு அங்கு வந்த அரங்க நாதனுடைய
    செம்பொற்கேழா விமானம் ஏழு மதில்கள் சூழ்ந்த செம்பொன் மயமாகிய விமானம் ,
    கிளர் செம்பொன் மேரு கிரி சிவந்த பொன் மயமான மஹா மேரு மலையையும் ,
    ஏழ் ஆவரணத்து இடை ஏழு மதில்களின் இடையே உள்ள இடங்கள்
    இடைத் தீவுகள் ஏழு கடல்களின் நடுவில் உள்ள சப்த த்வீபங்களையும் ,

    இவ் அனைத்தும் சூழ் ஆறு இவைகள் எல்லாவற்றையும் சூழ்ந்த காவிரி நதி
    மா கடல் நிகர்த்த பெரிய கடலையும் ஒத்தன
    எவ்வாறு நாம் இனிச் சொல்லுவதோ இனிமேல் நாம் எவ்விதம் சொல்லுவதோ ?

    V.Sridhar

    Last edited by sridharv1946; 23-12-13, 14:18.
Working...
X