Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 100/114 : சயனத் திருக்கோலம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 100/114 : சயனத் திருக்கோலம்

    5. திருவரங்கத்து மாலை - 100/114 : சயனத் திருக்கோலம்

    தாம் அக் கடை யுகத்துள்ளே விழுங்கி , தரித்த பழஞ்-
    சேமப் புவனம் செரிக்கும் என்றே - சிவன் மா முடிக்கு
    நாமப் புனல் தந்த பொற்றாள் அரங்கர் நலம் சிறந்த
    வாமத் திருக் கரம் மேலாகவே கண் வளர்வதுவே

    பதவுரை :

    சிவன் மா முடிக்கு சிவபிரானது பெரிய தலைக்கு
    நாமப் புனல் தந்த தூய்மையான கங்கா தீர்த்தத்தை கொடுத்த
    பொற்றாள் அரங்கர் அழகிய திருவடிகள் உடைய அரங்கர்
    நலம் சிறந்த அழகு மிக்க
    வாமத் திருக் கரம் மேலாகவே இடக்கை மேலாயிருக்க
    கண் வளர்வதுவே பள்ளி கொள்வது
    தாம் அக் கடை யுகத்துள்ளே விழுங்கி தாம் யுகாந்தத்தில் உட்கொண்டு
    தரித்த பழஞ்சேமப் புவனம் வயிற்றில் பாதுகாப்பாக வைத்திருக்கும் உலகங்கள்
    செரிக்கும் என்றே செரித்து விடக் கூடாது என்றே

    V.Sridhar
Working...
X